Archive for June, 2010
விளையாட்டரங்கின் சரிந்து விழுந்த கூரை: விரைவில் டெண்டர் அறிவிப்பு 30 Jun | செய்தி.
கோல திரெங்கானுவில் உள்ள சுல்தான் மிசால் சைனல் அபிடின் விளையாட்டரங்கத்தின் இடிபாடுகளை அப்புறப்படுத்தும் திட்டம், அம்மாநிலத்தின் டெண்டர் வாரியம் தனது குத்தகையாளரை தெரிவு செய்த பின்னர், அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்.
சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களிடம் எம்எசிசி விசாரணை 30 Jun | செய்தி.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி)யின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் இருவர் நாளை புத்ராஜெயாவில் அவர்களது வாக்குமூலத்தை வழங்கவிருக்கின்றனர்.
ராஜா பெட்ராவுடன் ஸைட் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தார், ஸாஹ்ரெய்ன் 30 Jun | செய்தி.
இணையப் பதிவேட்டாளர் ராஜா பெட்ரா கமாருடினும் மக்கள் கூட்டணி செயலக ஒருங்கிணைப்பாளர் ஸைட் இப்ராஹிமும் கடந்தாண்டு இங்கிலாந்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததற்கான ஆவணங்கள் இருக்கின்றன.
சுவாரா கெஅடிலான் அலுவலகத்துக்கு வெளியில் நூறு பேர் ஆர்ப்பட்டம் 30 Jun | செய்தி.
பிகேஆர் கட்சியின் அதிகாரத்துவ சஞ்சிகையான சுவாரா கெஅடிலான் அண்மையில் ‘பெல்டா திவால்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதனை ஆட்சேபித்து மகஜர் ஒன்றை சமர்பிப்பதற்காக இன்று பிற்பகல் பிற்பகல் ஷா அலாமில் உள்ள அதன் அலுவலகத்துக்கு முன்பு நூற்றுக்கும்...
ஸ்கோர்பியன் தரகுப்பணம் குறித்து எம்ஏசிசி விசாரிக்கிறது, மக்களவைத் தலைவர் 30 Jun | செய்தி.
இரு பிரஞ்சு ஸ்கோர்ப்பியன் நீர்மூழ்கிகளைக் கொள்முதல் செய்வதற்கு அப்துல் ரசாக் பகிண்டாவுக்கு 575 மில்லியன் ரிங்கிட் தரகுப்பணம் (கமிஷன்) தரப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) விசாரணை மேற்கொண்டிருப்பதாக மக்களைத்தலைவர் பண்டிக்கார் அமின் முலியா இன்று தெரிவித்தார்.
பிகேஎ இனியும் வசூலிப்பு முகவரல்ல, வருமான வரி வாரியம் அறிவிப்பு 30 Jun | செய்தி.
குவாலா டிமென்சி நிறுவனம் (கேடிஎஸ்பி)-க்கான வரி வசூலிப்பு அதிகாரத்தை போர்ட் கிள்ளான் நிர்வாகத்திடம் (பிகேஎ) இருந்து உள்நாட்டு வருமான வரி வாரியம் மீட்டுக்கொண்டுள்ளது.
“சுவாரா கெஅடிலான்” தலை தப்பியது 30 Jun | செய்தி.
பிகேஆரின் கொள்கை ஏடான சுவாரா கெஅடிலானின் பிரசுர உரிமம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்படவோ மீட்டுக்கொள்ளப்படவோ மாட்டாது. அந்த ஏடு வழங்கியுள்ள விளக்கம் பரிசீலிக்கப்படும்வரை அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
எம்எசிசி தனிப்பட்ட துப்பறிவாளர் பாலாவுடனான பேட்டியை ரத்து செய்கிறது 30 Jun | செய்தி.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி ) தனிப்பட துப்பறிவாளர் பாலாவுடைய வாக்குமூலத்தை லண்டனில் பதிவு செய்யாது.
மக்கள் உரிமைக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக மூன்றாவது புகார் 30 Jun | செய்தி.
மலேசிய இந்திய இளைஞர்கள் கல்வி மேற்கொள்வதற்கான சட்டப்பூர்வ அடிப்படை உரிமையை இந்நாட்டின் உச்ச தலைவர்கள் மறுத்திருப்பதாக மக்கள் உரிமைக் கட்சியின் வடகத்தி கிளை பினாங்கில் போலீஸ் புகார் செய்துள்ளது.
“கோலா டைமன்சி சென் பெர்ஹாட்டிடம் 1 பில்லியன் ரிங்கிட் சொத்துக்கள் உள்ளன; அது ஏன் வரியைச் செலுத்தக் கூடாது?” 30 Jun | செய்தி.
வருமான வரி வாரியம் கோலா டைமன்சி சென் பெர்ஹாட்டிடமிருந்து வரியை நேரடியாக வசூலிக்க வேண்டும். 2008ம் ஆண்டு முடிந்த நிதி ஆண்டில் 932.59 மில்லியன் ரிங்கிட் பெறும் சொத்துக்கள் இருப்பதாக அது அறிவித்துள்ளதை பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர்...
