Archive for May, 2009
சின் பெங் நாடு திரும்ப பிஎஸ்எம் ஆதரவு 31 May | செய்தி.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சின் பெங் நாடு திரும்ப அனுமதிக்குமாறு மலேசிய சோசலிசக் கட்சி மலேசிய அரசாங்கத்தை வற்புறுத்தியுள்ளது.
மலேசிய அரசாங்கமும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியும் 1989 ஆம் ஆண்டில் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தை மதித்து சின் பெங் நாடு...
அன்வார்: பாராட்டுகள்! 31 May | செய்தி.
கெஅடிலான் கட்சியின் வேட்பாளர் மன்சூர் ஓத்மானின் வெற்றிக்காக உழைத்த பக்கத்தான் தேர்தல் குழுவினரையும் அவருக்கு வாக்களித்த பெனாந்தி தொகுதி வாக்காளர்களுக்கும் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
பெனாந்தி: மன்சூர் ஓத்மான் வெற்றி பெற்றார் 31 May | செய்தி.
இடைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டபின் கெஅடிலான் கட்சியின் வேட்பாளர் மன்சூர் ஓத்மான் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சைபுடின்: மன்சூர் 75 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார் 31 May | செய்தி.
2008 ஆம் ஆண்டில் கட்சி பெற்ற வெற்றியைவிட இந்த இடைத் தேர்தலில் கட்சியின் வேட்பாளர் மன்சூர் ஓத்மான் பெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்று பிகேஆரின் தேர்தல் இயக்குனர் சைபுடின் நசுடியன் கூறுகிறார்.
பெனாந்தி இடைத் தேர்தல்: 40 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர் 31 May | செய்தி.
மிக மெதுவாகத் தொடங்கிய வாக்களிப்பில் இப்போது வேகம் காணப்படுகிறது.
பிற்பகல் மணி 2.00: தேர்தல் ஆணையத்தின் செயலாளர் 38.77 விழுக்காடு அல்லது 5,964 வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக அறிவித்தார்.
பெனாந்தி: வாக்காளர்கள் வருகையில் வேகம் குறைவு 31 May | செய்தி.
காலை மணி 8.00: பெனாந்தி இடைத் தேர்தல் வாக்களிப்பு தொடங்கியது. ஆனால் வாக்காளர்கள் குறைவாகவே காணப்பட்டனர்.
காலையில் வாக்களிக்க வந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்.
15,384 வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் வாக்களிப்பு மாலை மணி 5.00 வரையில் வாக்களிப்பு நடைபெறும்.
சோசலிசக் கட்சி: பேராக்கில் ஒரு நாள் கதவடைப்பு தீர்மானம் 31 May | செய்தி.
பேராக் மாநில சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு புதியத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு மாநில அளவில் ஒரு நாள் கதவடைப்புச் செய்ய வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) முன்மொழியவிருக்கிறது.
நாளை முடிவடையவிருக்கும் சோசலிசக் கட்சியின்...
இராமசாமி:”உலகத்தமிழர்களின் தமிழீழ கனவு நிறைவேறும்!” 30 May | செய்தி.
ஐந்தாம் கட்ட ஈழப்போரை பிரபாகரன் முன்னெடுப்பார், உலகத்தமிழர்களின் தமிழீழ கனவு நிறைவேறும் என்று அதிரிட்டுக் கூறுகிறார் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி. இராமசாமி.
“பிரபாகரன் வீரச்சாவடைந்தாரா, உயிரோடு உள்ளாரா?? என்பதுதான் இன்றைய நிலையில் உலகத்தமிழர்களால் உற்று நோக்கப்படும் விடயமாக உள்ளது”, என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
பேசக்கூடாதவை: முதலில் அல்தான்துயா, இப்போது பேராக் 30 May | செய்தி.
கொலை செய்யப்பட்ட மங்கோலியப் பெண் அந்தான்துயா மற்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகிய இருவருக்கும் இடையில் தொடர்பு இருந்த சாத்தியம் பற்றி பேசினால்கூட ஒருவர் ஆபத்தில் சிக்கிக்கொள்ளலாம் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை பெனாந்தி இடைத் தேர்தல் பரப்புரையில்...
கிட் சியாங், கோபாலா போலீசாரால் விசாரிக்கப்பட்டனர் 30 May | செய்தி.
பெனாந்தி இடைத் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் நிகழ்த்திய உரைகளுக்காக இரு மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பிரதமர் நஜிப்பிற்கு எதிராக “தேச நிந்தனை மற்றும் கிரிமினல் அவதூறு” புரிந்ததாகச் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து ஜசெகவின் லிம் கிட் சியாங்...
