Archive for October, 2008
அப்துல் ரசாக் பகிண்டா விடுதலை 31 Oct | செய்தி.
ஆகக் கடைசியான தகவல்கள்
மங்கோலியப் பெண் அல்தான்துயா சரீபுவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அரசியல் விமர்சகர் அப்துல் ரசாக் பகிண்டாவை இன்று ஷா அலம் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
மஇகா தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது 31 Oct | செய்தி.
மார்ச் 8 பொதுத்தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்த மஇகா அதன் தலைவர் பதவிக்கான தேர்தலைத் தவிர இதர பதவிகளுக்கான கட்சித் தேர்தலை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு 31 Oct | செய்தி.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவதைத் தொடர்ந்து, மலேசிய அரசாங்கம் எரிபொருள் விலையில் மேலும் 15 காசை குறைத்துள்ளது.
தலைப்புச் செய்திகள்-அக்டோபர் 31 31 Oct | செய்தி.
தலைப்புச் செய்திகள்-அக்டோபர் 31
மலேசியாவில் இன்று வெளியாகியுள்ள ஆங்கில, மலாய்,சீன நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்.
ரப்பரின் விலையை உயர்த்த, உற்பத்தி குறைக்கப்படும் 31 Oct | செய்தி.
உலகின் மிகப் பெரிய ரப்பர் உற்பத்தி நாடுகளான தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய மூன்றும் விலையை உயர்த்தும் நோக்கில் உற்பத்தியைக் குறைப்பதற்கு முடிவு செய்துள்ளன.
அன்வாரின் வழக்கு இன்று தொடர்கிறது 31 Oct | செய்தி.
கெஅடிலான் தலைவர் அன்வார் இப்ராகிம், குதப்புணர்ச்சி வழக்கின் தொடர்பில் இன்று மீண்டும் நீதிமன்றம் திரும்பினார்.
அரசாங்கத் தரப்பு கேட்டுக்கொண்டதுபோல் அவரது வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படலாகாது என்பதற்கான காரணங்களை அன்வாரின் வழக்குரைஞர் சுலைமான் அப்துல்லா செஷன்ஸ் நீதிபதி எஸ்.எம்.கோமதி முன்னிலையில் எடுத்துரைத்து வருகிறார்.
அப்துல் ரசாக் பகிண்டா விடுதலை 31 Oct | செய்தி.
சற்று முன்னர் கிடைத்த தகவல்
நஜிப்புக்கு அணுக்கமானவர்
அரசாங்கத் தரப்பு மேல் முறையீடு செய்யும்
மங்கோலிய பெண்ணான அல்தான்துயா சாரிபுவின் கொலையில் உடந்தையாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பகிண்டாவை இன்று ஷாஅலம் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
அல்தான்துயா கொலை வழக்கில் நாளை முக்கிய முடிவு 30 Oct | செய்தி.
மங்கோலிய பெண் அல்தான்துயா சாரீபூவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரை எதிர்வாதம் செய்ய அழைப்பதா இல்லையா என்பதை ஷா அலாம் உயர்நீதி மன்றம் நாளை முடிவு செய்யும்.
எஸ்ஏபிபி: உறுப்பினர் வெளியேற்றம் இல்லை 30 Oct | செய்தி.
சாபா முற்போக்குக் கட்சி (எஸ்ஏபிபி), முன்னாள் தலைவர்கள் சிலர் சண்டாகானில் கட்சியின் பலத்தைக் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்.
முன்னாள் துணைத்தலைவர் ரேய்மண்ட் டான் தலைமையில் செயல்படும் அக்குழுவினர், ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்...
‘மெகா-திட்டங்கள்’ மீதான தீர்மானம்:முடிவு ஒத்திவைப்பு 30 Oct | செய்தி.
மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, மூன்று மெகா திட்டங்களை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் கொண்டுவந்த அவசரத் தீர்மானம் மீது முடிவெடுப்பதைத் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
