<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress/2.9.2" -->
<rss version="0.92">
<channel>
	<title>மலேசியாஇன்று</title>
	<link>http://www.malaysiaindru.com</link>
	<description>வணக்கம்</description>
	<lastBuildDate>Fri, 10 Sep 2010 08:06:30 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>அம்னோ தலைவர்கள் பெர்க்காசா நிகழ்வுகளைப் புறக்கணிக்க வேண்டும்</title>
		<description><![CDATA[மலாய் தீவிரவாத அமைப்பான பெர்க்காசாவுடன் உறவுகளை முறித்துக்கொண்டிருக்கும் அம்னோவுக்கு பினாங்கில் தளம்கொண்டிருக்கும் பார்டி சிந்தா மலேசியா ஆதரவு தெரிவிக்கிறது.
அதன் உதவித் தலைவர் ஹுவான் செங் குவான், நேராக சிந்திக்கும் எவரும் அல்லது எத்தரப்பினரும் இப்ராகிம் அலியால் வழிநடத்தப்படும் அந்த அமைப்பைவிட்டு விலகியே இருப்பார்கள் என்றார்.  
“சீனர்களின் ஆதரவும் மற்ற இனத்தவரின் ஆதரவும் தேவை என்று நினைத்தால் இப்ராகிம் அலியையும் பெர்க்காசாவையும் தான் ஆதரிக்கவில்லை என்று  அம்னோ தெளிவாக அறிவிக்க வேண்டும்”, என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அம்னோ தலைமைத்துவம், அதன் [...]]]></description>
		<link>http://www.malaysiaindru.com/?p=51247</link>
			</item>
	<item>
		<title>&#8220;ஆவணங்கள் வெளியிடப்படுவதைத் தடுக்க&#8221; மலேசியாடுடே முடக்கப்பட்டுள்ளது</title>
		<description><![CDATA[ராஜாபெட்ராவை செய்தி ஆசிரியராகக் கொண்ட மலேசியா டுடே இணையச் செய்தித்தளம் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு தடவை இனம் காண முடியாத தொழில்நுட்பப் பிரச்னைகளால் இணையத்தளத்திலிருந்து காணாமல் போனது. அரசாங்கத்தில் நிலவும் ஊழலை அம்பலப்படுத்தும் ஆவணங்களை வெளியிட்ட பின்னர் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
அந்த ஆவணங்களில் ஒன்று தேசிய விமான நிறுவனமான எம்ஏஎஸ்-ஸை அம்னோ எப்படிச் சூறையாடியது என்பதை விவரிக்கிறது. இன்னொரு ஆவணம் இரட்டைத் தண்டவாளத் திட்டக் குத்தகையைப் பெற்றுள்ள சைனா ரயில்வே எஞ்சினியரிங் கார்ப்பரேசனிடமிருந்து (சிஆர்இசி) ரிம200 [...]]]></description>
		<link>http://www.malaysiaindru.com/?p=51236</link>
			</item>
	<item>
		<title>ரஷ்யாவில் மீண்டும் தற்கொலைத் தாக்குதல்: 15 பேர் பலி</title>
		<description><![CDATA[ரஷ்யாவில் இன்று மீண்டும் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்; 100 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ரஷ்யாவின் வடக்கு காக்கசஸ் நகரில் உள்ள விளாடிகாவ்காஷ் என்ற மார்க்கெட் பகுதியில், வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரில் வந்த நபர் அந்த காரை வெடிக்கச் செய்து நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், 133 பேர் காயமடைந்ததாகவும் அவசர நிலைத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த [...]]]></description>
		<link>http://www.malaysiaindru.com/?p=51231</link>
			</item>
	<item>
		<title>மலேசியாஇன்று ஹரி ராயா நல்வாழ்த்துகள்</title>
		<description><![CDATA[மலேசியாஇன்று அதன் வாசகர்கள் மற்றும் மலேசியர்கள் அனைவருக்கும் ஹரி ராயா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
]]></description>
		<link>http://www.malaysiaindru.com/?p=51224</link>
			</item>
	<item>
		<title>உலகாய போட்டியிடும் ஆற்றலில் மலேசியா இறங்குமுகம்</title>
		<description><![CDATA[அனைத்துலக பொருளாதார ஆய்வரங்கின் 2010-2011 ஆண்டுக்கான உலகாய போட்டியிடும் ஆற்றல் மீதான
அறிக்கையின்படி மலேசியா 24வது இடத்திலிருந்து 26வது இடத்துக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதில், உயர்கல்வி,
கல்விக் கழகங்கள் மற்றும் தொழிலாளர் ஆற்றல் மீது கவனம் செலுத்தப்பட்டது.நாட்டின் தகுதி, 20080/2009ஆம் ஆண்டின் 21வது இடத்திலிருந்து தொடர்ச்சியாக மூன்றாண்டுகளுக்கு இறங்குமுகமாக உள்ளது. மேம்பாடு காணப்பட வேண்டிய மற்ற முக்கிய துறைகளில்  பயிற்சிகள், தொழில்நுட்ப தயார் நிலை ஆகியவையும் அடங்குமென அந்த அறிக்கை குறிப்பிட்டது.
ஆயினும் போட்டித் திறன் குறியீட்டில், நாடு, கிட்டத்தட்ட 4.88ல் [...]]]></description>
		<link>http://www.malaysiaindru.com/?p=51218</link>
			</item>
	<item>
		<title>அன்வார் தலைவராக வேண்டும், சிலாங்கூர் பிகேஆர் தொகுதிகளின் விருப்பம்</title>
		<description><![CDATA[எதிர்வரும் பிகேஆர் கட்சி தேர்தலில் அன்வார் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூரில் 22 பிகேஆர் தொகுதிகளைப் பிரதிநிதிப்பாக கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாமாயில் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் அக்குழுவின் விருப்பம்.
இது சாத்தியப்படாது என்றால், தற்போதைய தலைமைத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும், வான் அசிசா தலைவராகவும் சைட் ஹுசேன் அலி துணைத் தலைவராகவும் தொடர வேண்டும்.
மாநிலத்திலுள்ள 22 தொகுதிகளுக்கிடையில் இந்த புரிந்துணர்வு [...]]]></description>
		<link>http://www.malaysiaindru.com/?p=51209</link>
			</item>
	<item>
		<title>988எஃப்எம் பணி நீக்கம்: மசீசவைக் காரணம் காட்டாதீர், டாக்டர் சுவா</title>
		<description><![CDATA[988 எஃப்எம் அறிவிப்பாளர் ஜமாலுடின் இப்ராஹிமும் அதன் நிர்வாகத் தலைவர் வோங் லாய் ங்கோவும் தாங்கள் நீக்கப்பட்டதற்கு மசீசதான் காரணம் எனக் கூறியிருப்பதை அக்கட்சியின் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் நிராகரித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட வானொலி நிலையம் உட்பட மசீசவுக்குச் சொந்தமான த ஸ்டார் நாளிதழின் துணை நிறுவனங்கள் எதிலும் தலையிடும் கொள்கையைக் கட்சிக் கொண்டிருக்கவில்லை என சுவா மீண்டும் கூறினார்.
மேலும் ஜமாலுடின் நடத்திய &#8220;ஹாய் மலேசியா&#8221; காலை நிகழ்ச்சிக்கு எதிராக ஆர்டிஎம் அதிகாரி யாப் ஷி சுவான் மலேசிய [...]]]></description>
		<link>http://www.malaysiaindru.com/?p=51190</link>
			</item>
	<item>
		<title>அமினுல்ரஷிட்டை நினைவில் கொள்ளுமாறு வழக்குரைஞர்கள் நினைவுறுத்தல்</title>
		<description><![CDATA[முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளைக் கொண்டாடவிருக்கும் வேளையில் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட அமினுல்ரஷிட் அம்ஸா குடும்பத்தினர் அந்த மகிழ்ச்சியில் இல்லை என்பதை வழக்குரைஞர்கள் நினைவுறுத்தியுள்ளனர். 
அமினுல்ரஷிட்டின் கொலைக்குக் காரணமானதோடு, அவரது தோழனையும் தாக்கிய அந்த போலீஸ்காரர்கள் இன்னமும் நீதியின் முன் நிறுத்தப்படாதது குறித்து &#8220;விடுதலைக்கான வழக்குரைஞர்கள்&#8221; எனும் அரசு சாரா மனித உரிமை அமைப்பு ஏமாற்றம் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அக்கறைக் கொள்ளாதிருப்பது குறித்து அமினுல்ரஷிட்டின் குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர். அவர்களின் வழக்குரைஞர்கள் என் சுரேந்திரன், லத்தீஃபா கோயா கையெழுத்திட்டு [...]]]></description>
		<link>http://www.malaysiaindru.com/?p=51171</link>
			</item>
	<item>
		<title>பெர்லிசில்,ஹரி ராயாவை முன்கூட்டியே கொண்டாடியவர்கள் கைது</title>
		<description><![CDATA[நோன்புப் பெருநாளை முன்கூட்டியே கொண்டாடிய ஒன்பது பேரைக் கைது செய்து தண்டித்திருப்பதாக பெர்லிஸ் இஸ்லாமிய சமய அதிகாரிகள் தெரிவித்தனர். 
வெள்ளிக்கிழமைதான் ஹரி ராயா என்று மலேசியா உள்பட உலகின் பல பகுதிகளில் முடிவு செய்யப்பட்டிருக்கும் வேளையில் ஜாமியா அல்-ஸிக்ரி அவ்வாலுன் என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள் புதன்கிழமையே பெருநாளைக் கொண்டாடத் தொடங்கி விட்டனர்.
“அப்பிரிவினர், பெருநாளைக் கொண்டாடும் விதம் மற்ற முஸ்லிம்களிலிருந்து மாறுபட்டுள்ளது. மாநில ஷியாரியா சட்டத்தை மீறி அவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள்”, என்று பெர்லிஸ் இஸ்மாமிய சமயத்துறைத் தலைவர் அப்துல் மாலிக் [...]]]></description>
		<link>http://www.malaysiaindru.com/?p=51185</link>
			</item>
	<item>
		<title>உதயா:ஹரி ராயாவை முன்னிட்டு  ஐஎஸ்ஏ கைதிகளை  விடுதலை செய்க</title>
		<description><![CDATA[ஹரி ராயா உணர்வுடன், எல்லா ஐஎஸ்ஏ கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும், ஐஎஸ்ஏ ரத்துச் செய்யப்பட வேண்டும், கமுண்டிங் முகாம் மூடப்பட வேண்டும் என்று மனித உரிமைக் கட்சித் தலைவர் பி.உதயகுமார் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
நேற்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேனுக்கு எழுதிய திறந்த மடலில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஒவ்வொரு மனிதரும் தம் கட்சியை எடுத்துரைக்கவும் நியாயமாக விசாரிக்கப்படவும் சட்டம் உரிமை அளிக்கிறது,
சட்டப்படி, குற்றவாளி என்று ஒருவரை நிரூபிக்கும்வரை அவர் நிரபராதிதான் என்பதால் விசாரணையின்றி ஒருவரை ஐஎஸ்ஏ-இன்கீழ் தடுத்து வைக்கக்கூடாது [...]]]></description>
		<link>http://www.malaysiaindru.com/?p=51181</link>
			</item>
</channel>
</rss>
