Author Archive
“தாக்கி விட்டு ஓட வேண்டாம்” என மூசா ஹசானிடம் கூறப்பட்டது 8 Sep | தலைப்பு செய்தி.
பதவிக்காலத்தை முடித்துச் செல்லும் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், போலீஸ் விவகாரங்களில் “மூன்றாம் தரப்பு தலையிடுவதாக” கூறியுள்ளதற்காக பொறுப்பேற்று, அதிகாரப்பூர்வமாக புகார் செய்ய வேண்டும்
என பிகேஆர் வியூக இயக்குநர் தியன் சுவா கூறியுள்ளார்.
இன, சமய அடிப்படையிலான கட்சிகளை நிராகரியுங்கள், கெராக்கான் இளைஞர் பிரிவு 7 Sep | செய்தி.
இன, சமய அடிப்படையிலான அரசியலைத் துடைத்தொழிக்கும் நடவடிக்கைகளை தேசிய முன்னணியும் மக்கள் கூட்டணியும் மேற்கொள்ள வேண்டும் என கெடா கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங் வலியுறுத்தியுள்ளார்.
13 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அஸ்மினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் 7 Sep | செய்தி.
பிகேஆரின் உதவித் தலைவர் அஸ்மின் அலி கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
“மரத்தின்கீழ் சட்டமன்றம்” கூட்டத்தை வீடியோ படமெடுத்தவருக்கு எதிரான குற்றச்சாட்டு தள்ளிவைக்கப்பட்டது 7 Sep | செய்தி.
படத் தணிக்கை வாரியத்தின் அனுமதி பெறாத டிவிடி வைத்திருந்திருந்ததாக தெபிங் திங்கி சட்டமன்ற உறுப்பினர் ஓங் பூன் பியவ் மீது சாட்டப்படவிருந்த குற்றச்சாட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அணுசக்தி கருத்தரங்கம்: உலகம் முழுவதுமிருந்து விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர் 7 Sep | உலகச் செய்திகள்.
ஆசிய அளவில் அணு சக்தி மேம்பாடு பற்றிய 4 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் சென்னையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்தும் 250 அணு விஞ்ஞானிகள் கலந்துகொள்கிறார்கள்.
ஆவணங்களைப் பெறுவதற்கான தர்மேந்திரனின் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது 7 Sep | செய்தி.
அரச மலேசிய வான்படைக்குச் சொந்தமான இரண்டு ஜெட் விமானங்களைத் திருடியதாக சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்களில், தாம் நிரபராதி என்பதை மெய்ப்பிப்பதற்கு, முன்னாள் வான்படை சார்ஜெண்ட் என்.தர்மேந்திரன், பிராசிகியுஷன்...
சமூக சீர்க்கேடுகளிலிருந்து பள்ளி மாணவர்களை மீட்க ஒன்றுப்படவேண்டும், டாக்டர் சேவியர் 7 Sep | சிறப்பு செய்தி.
இடைநிலைப்பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளின் செயல்கள் மீது பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“சீனா திரும்பிச் செல்லுங்கள்”, ஆவேசப் பேச்சுக்காக போலீசார் பதில் கூற வேண்டும் 6 Sep | செய்தி.
இனவாதக் கருத்தை தெரிவித்ததாக கூறப்படும் விசாரணை அதிகாரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புகார்
குறித்து மறுமொழி தெரிவிப்பதற்கு, வரும் வெள்ளிக்கிழமை வரை, போலீசாருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
அல்லது அந்த விவகாரம் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் வரை கொண்டு செல்லப்படும்.
இளைஞர் ஆய்வுக்கூடம் மீது கவனம் செலுத்தப்படாவிட்டால் நான் ஏமாற்றம் அடைவேன், கேஜே 6 Sep | செய்தி.
தேசிய முன்னணி இளைஞர் ஆய்வுக் கூடத்தில்தான் கைரி ஜமாலுடின் அபு பக்காரின் உயிரும் உள்ளமும் இணைந்திருக்கிறது என அவரைத் தெரிந்தவர் கூறுவர்.
பிப்ரவரி 17, புதன்கிழமை மதியம் அம்னோ இளைஞர் தலைவர்கள் கட்சித் தலைவரும் பிரதமருமான நஜிப் துன் ரசாக்கை மரியாதை...
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பிளேர் மீது “ஷூ”, முட்டை வீச்சு! 6 Sep | உலகச் செய்திகள்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீது ஷூ மற்றும் முட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
