Author Archive

பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் தமிழ்ப்பள்ளிகளின் மறுமலர்ச்சி இயக்கமாக மாற வேண்டும் 31 Jul | சிறப்பு செய்தி. தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் பெற்றோர்களும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களும் மிகுந்த ஈடுபாடு காட்ட வேண்டும். பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஓர் இயக்கமாக மாற வேண்டும்; ஒருவர் தன் வீட்டின் மீது காட்டும் ஈடுபாட்டை தமிழ்ப்பள்ளியின் மீதும் கொண்டிருக்க வேண்டும். இக்கருத்துகள் “பெற்றோர்களின் எழுச்சி தமிழ்ப்பள்ளிகளின் மறுமலர்ச்சி”...
click to read more
லிங்கின் கைது நடவடிக்கை, குடும்பத்தார் எதிர்பாராதது 30 Jul | செய்தி. கிள்ளான் துறைமுக தீர்வையற்ற வாணிக வட்டாரத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சரவைக்கு பொய்யான  தகவலை  வழங்கியதற்காக, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக், நேற்று பிற்பகல் கைது  செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டது, நாட்டு மக்களை மட்டுமின்றி, அவரது குடும்பத்தாரையும்  ஆச்சர்யத்தில் ...
click to read more
உறுதியற்ற பொருளாதாரம் கவலை அளிக்கிறது என்கிறார் சிஐஎம்பி தலைவர் 30 Jul | செய்தி. கடந்தாண்டு மலேசியா அனுபவித்த அந்நிய நேரடி முதலீடுகளின் வீழ்ச்சிக்கு, நாட்டின் பொருளாதாரத்தை  மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளினால் உருவான உறுதியற்ற சூழ்நிலைகளும் ஒரு காரணம் என்று  சிஐஎம்பி தலைவர் நசிர் ரசாக் இன்று கூறியுள்ளார்.
click to read more
கல்வியாளர்களையும் மாணவர்களையும் அரசியலில் ஈடுபட அனுமதியுங்கள், அம்னோ இளைஞர் பிரிவு 30 Jul | செய்தி. விரைவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரும் அரசியலில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
click to read more
லிங்கின் விவகாரம் நீதித்துறையின் நடுநிலையை உணர்த்துகிறது, முஹிடின் 30 Jul | செய்தி. போக்குவரத்து முன்னாள் அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் குற்றம்சாட்டப்பட்டிருப்பது நாட்டின் நீதிபரிபாலனமும் சட்ட நடைமுறையும் நடுநிலையுடன் இருப்பதைப் பிரதிபலிக்கிறது. அவ்வாறு இல்லை எனக் கூறும் எதிர்கட்சிகளின் கூற்றை இந்நடவடிக்கைப் புறந்தள்ளியுள்ளது என துணைப்பிரதமர் முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.
click to read more
பிகேஎஃப்ஸெட்: வழக்கின் தீர்ப்புதான் முக்கியம், ரோனி லியு 30 Jul | செய்தி. கிள்ளான் துறைமுகத் தீர்வையற்ற பகுதி மேம்பாடு ஊழல் தொடர்பில் “பெரிய தலை” ஒன்றை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டால் மட்டும் போதாது. மாறாக அந்த விவகாரத்துக்கு உண்மையாகத் தீர்வு காணவேண்டும் என டிஎபியில் ரோனி லியூ வலியுறுத்தியுள்ளார்.
click to read more
கொம்தாரில் உள்ள எஸ்டிஒ அலுவலகம்: அரைமில்லியன் ரிங்கிட் விரயம் 30 Jul | செய்தி. பினாங்குத் தீவையும் அதன் பெருநிலத்தையும் மேம்படுத்தும் பொறுப்பைக் கொண்ட மாநில மேம்பாட்டு முன்னாள் அதிகாரியின் அலுவலகத்தின் வெளிப்புறம் மிக அழகாகவும் அமைதியாகவும் காணப்படும்.
click to read more
அரண்மனைக் கட்டுமான விசாரணை தொடர்பில் சுஹாகாம் பொதுப்பணி அமைச்சைச் சந்திக்கவிருக்கிறது 30 Jul | செய்தி. புதிய அரண்மனை கட்டுமானப் பகுதியில் அந்நியத் தொழிலாளர்கள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் மீதான விசாரணை குறித்த மேல் விவரங்களை அறிய மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) பிரதிநிதிகள் பொதுப்பணி அமைச்சுடன் அடுத்த வாரம் சந்திப்பு நடத்தவிருக்கின்றனர்.
click to read more
பிகேஎப்சட் ஊழல்: முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குற்றம்சாட்டப்பட்டார் 30 Jul | செய்தி. ஆகக் கடைசி தகவல்கள் பில்லியன் கணக்கிலான ரிங்கிட் கிள்ளான் துறைமுக தீர்வையற்ற வாணிக வட்டார ஊழலில் சம்பந்தப்பட்டதற்காக, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியோங் சிக்,  காஜாங் செஷன்ஸ்  நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டார்.
click to read more
10-ஆவது மலேசியத் திட்டம் மீதான பினாங்கு ஆய்வரங்கில் வாய்ச்சண்டை 29 Jul | செய்தி. பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற புதிய பொருளாதார வடிவம் மீதான பொது ஆய்வம் அம்னோவுக்கும் மக்கள் கூட்டணிக்கும் இடையிலான அரசியல் விவாத மேடையாக மாறியதால், அதில் கலந்துகொண்டோர் வியப்புக்கு ஆளாகினர்.
click to read more