May 10 2008
அரச நிந்தனை வழக்குகள்:வழக்கறிஞர் மன்றம் சாடல்
மலேசியாஇன்று, May 09 2008, 8:06 pm (செய்தி)
விவாதங்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் தடை செய்யும் வழிமுறையாக அரச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படும் போக்கு குறித்து வழக்கறிஞர் மன்றம் அச்சம் தெரிவித்துள்ளது. இன்னும் படிக்க
கைரியின் ரெம்பாவ் வெற்றிக்கு எதிராக முறையீடு
மலேசியாஇன்று, May 09 2008, 7:33 pm (செய்தி)
மார்ச் 8 தேர்தலில் நெகிரி செம்பிலான் ரெம்பாவ் தொகுதி தேர்தல் முடிவுக்கு எதிராக முறையீடு செய்துகொள்ளப்பட்டிருக்கிறது. இன்னும் படிக்க
செராஸ் சாலை மறியலில் கலவரம்
மலேசியாஇன்று, May 09 2008, 4:16 pm (செய்தி)

வழக்கமாக அமைதியாய் இருக்கும் பண்டார் மக்கோத்தா செராஸ் (பிஎம்சி) நேற்றிரவு அல்லோலகல்லோலப்பட்டது. சுமார் 500 குடியிருப்பாளர்மீது போலிசார் பீரங்கி வண்டியிலிருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்ததுடன் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வெடித்தனர். இன்னும் படிக்க
தலைப்புச் செய்திகள்: மே9
மலேசியாஇன்று, May 09 2008, 4:09 pm (செய்தி)
மலேசியாவில் இன்று வெளியாகியுள்ள ஆங்கில, மலாய் மற்றும் தமிழ் நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்.
ஆங்கில நாளிதழ்கள்
த ஸ்டார்:சித்தி ஃபத்திமா டான் அப்துல்லா இஸ்லாத்தை துறந்து பெளத்தமதத்தை தழுவுவது தொடர்பான செய்தியை முகப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. இன்னும் படிக்க
லிங்கம் ஒளிநாடா மீதான அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுமா?
மலேசியாஇன்று, May 09 2008, 1:36 pm (செய்தி)
லிங்கம் ஒளிநாடா மீதான அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். வி.கே.லிங்கம் ஒளிநாடா மீதான அரச ஆணையத்தின் தலைவர் ஹய்டர் முகம்மட் நூர் இவ்வாறு கருதுகிறார். இன்னும் படிக்க
ராஜா பெட்ரா ஜாமினில் வெளிவந்தார்
மலேசியாஇன்று, May 09 2008, 1:28 pm (செய்தி)
மலேசியா டூடே வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின் இன்று காலை மணி 9.30க்கு பெட்டாலிங் ஜெயா செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
செவ்வாய்க்கிழமையிலிருந்து அவர் சுங்கை பூலோ சிறையில் இருந்தார். அங்கு அவர் ஷாரிபு அல்டான்துயா கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிருல் அஸ்கார் உமரையும் அசிலா ஹட்ரியையும் சந்தித்ததாக கூறினார். இன்னும் படிக்க
கைரி மட்டம் தட்டப்பட்டார்
மலேசியாஇன்று, May 08 2008, 11:03 pm (செய்தி)
இன்று நடந்த நாடாளுமன்ற கூட்ட விவாதத்தின் போது ரெம்பாவ் தொகுதி பாரிசான் உறுப்பினர் கைரி ஜமாலுடின் இரு பாக்கத்தான் உறுப்பினர்களுடன் மோதி அவர்களால் மட்டம் தட்டப்பட்டார்.
மாமன்னரின் உரைக்கு நன்றி கூறும் விவாதத்தின் போது பாக்கத்தான் கோம்பாக் தொகுதி உறுப்பினர் அஸ்மின் அலி தகவல் சுதந்தரச் சட்டம் இயற்றப்பட வேண்டும்; அதிகார இரகசியச் சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று கூறினார். இன்னும் படிக்க
மகாதிர் - நஜீப் சந்திப்பை தடுக்கவில்லை: பிரதமர்
மலேசியாஇன்று, May 08 2008, 8:07 pm (செய்தி)
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரை துணைப்பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் சந்திப்பதற்கு தாம் தடையாக இருந்ததாய் கூறப்படுவதை பிரதமர் அப்துல்லா அகமட் படாவி மறுத்தார்.
நேற்று மகாதிர் அவ்வாறு கூறியது குறித்து கருத்துக் கேட்கப்பட்ட போது ” தாக் ஹலாங் தாக் ஹலாங் ( தடுக்கவில்லை, தடுக்கவில்லை)” என்று மட்டும் பிரதமர் குறிப்பிட்டார். இன்னும் படிக்க
பாரிசான் நேசனல் பொதுமக்களை பாதுகாக்க தவறியுள்ளது:ஜசெக
மலேசியாஇன்று, May 08 2008, 8:02 pm (செய்தி)
பாரிசான் நேசனல் அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளில் பொதுமக்களை பாதுகாக்கும் அதன் கொள்கை பயன் அளிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சரவாக் சட்ட மன்றத்தில் கூறினார்.
இதன் விளைவாக பெரிய சிறிய நகரங்களில் குற்றச்செயல் அதிகரிப்பதிருப்பதாக வூன் லீ சன் (ஜசெக பத்து லிந்தாங்) சட்ட மன்றத்தில் நேற்று தெரிவித்தார். இன்னும் படிக்க
மதமாறியவர் இஸ்லாத்தைத் துறப்பதற்கு ஷியாரியா நீதிமன்றம் அனுமதி
மலேசியாஇன்று, May 08 2008, 6:30 pm (செய்தி)
பினாங்கு ஷரியா நீதி மன்றம், மதமாறிய சீனர் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேற இன்று அனுமதி அளித்தது.
இஸ்லாத்தில் மதம் மாறுவது மிகப் பெரிய பாவச் செயலாக கருதப்படுகிறது. மலேசியாவில் அது உணர்ச்சியைத் தூண்டும் விவகாரமாக இருந்து வந்துள்ளது. இஸ்லாமிய நீதிமன்றங்களில் மதம் மாறுவதற்கு அனுமதி அளிக்கப்படுவது மிக அரிதாகும். இங்கு இஸ்லாத்தை விட்டு வெளியேற முயன்றவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தது உண்டு. இன்னும் படிக்க




